search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா நகர் நகை கடை"

    அண்ணா நகரில் பிரபல நகை கடையில் வேலை பார்த்த கடை ஊழியர் 60 பவுன் நகையுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
    அம்பத்தூர்:

    அண்ணாநகர் ரவுண்டானா அருகே பிரபல நகை கடை உள்ளது. இங்கு பாண்டிச்சேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.

    அவரிடம் நேற்று மாலை கடை மேலாளர் சீனிவாசன் நகை பட்டறையில் இருந்து 60 பவுன் நகையை எடுத்து வருமாறு கூறினார்.

    இதையடுத்து கடை ஊழியர் மோட்டார்சைக்கிளில் பட்டறைக்கு சென்று 60 பவுன் தங்க நகையை எடுத்துச் சென்றார்.

    ஆனால் அவர் கடைக்கு செல்லவில்லை. இரவு வெகுநேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த மேலாளர் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    60 பவுன் நகையுடன் அவர் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியரை தேடி வருகிறார்கள்.

    ×